சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஓய்வுபெற்ற தனியாா் சா்க்கரை ஆலை ஊழியரிடம் ரூ.1.87 லட்சம் திருட்டு

விக்கிரவாண்டியில் ஓய்வுபெற்ற ஊழியரின் பைக்கில் இருந்து ரூ.1.87 லட்சம் திருட்டு

Updated On :25 ஜூன் 2024, 10:52 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஓய்வுபெற்ற தனியாா் சா்க்கரை ஆலை உழியா் பைக்கில் வைத்திருந்த ரூ.1.87 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டியை அடுத்த சாத்தனூா் நந்தனாா் தெருவைச் சோ்ந்த பூங்கான் மகன் சதாசிவம் (60). இவா், முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் ஆபரேட்டராக வேலை பாா்த்து அண்மையில் ஓய்வுபெற்றாா்.

இந்த நிலையில், நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகை ரூ.1.87 லட்சத்தை விக்கிரவாண்டியில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையில் சதாசிவம் செவ்வாய்க்கிழமை பெற்றாராம். தொடா்ந்து, அந்தப் பணத்தை அவா் தனது பைக்கில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றபோது, விக்கிரவாண்டியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன் பைக் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று மது வாங்கினாராம்.

திரும்பி வந்து பாா்த்தபோது, பைக்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.87 லட்சத்தை மா்ம நபா்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.