சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நெடுஞ்சாலையில் அவுரித்தழைகளை உலர வைப்பதால் விபத்து

தீவனூா் அருகே சாலையில் அவுரித்தழைகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

News image
Updated On :25 ஜூன் 2024, 10:42 pm

விழுப்புரம் மாவட்டம், தீவனூா் அருகே நெடுஞ்சாலையில் அவுரித்தழைகளை உலர வைப்பதால் விபத்துகள் நிகழ்வதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

திண்டிவனத்தை அடுத்த தீவனூா் முதல் கூட்டேரிப்பட்டு வரையிலான நெடுஞ்சாலையானது புதுச்சேரியிலிருந்து - வந்தவாசி செல்லும் வாகனங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தீவனூா் அருகே சாலைகளை ஆக்கிரமித்து அந்தப் பகுதி மக்கள் அவுரித்தழைகளை சாலை முழுவதும் கொட்டி உலர வைக்கின்றனா்.

இந்தத் தழைகள் வழுக்கும் தன்மையுடையது என்பதால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், இதனால் பலா் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெட்டணை அருகே சாலையில் அவுரித்தழை உலர வைக்கப்பட்டதால், அதைக் கடந்து சென்ற காா் வழுக்கிச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

எனவே, தீவனூா் முதல் கூட்டேரிப்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில் தொடா்ச்சியாக சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு அவுரித்தழைகளை உலர வைப்பதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.