பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 5:43 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பாப்பாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மல்லிகா (58). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் காலனி தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க சென்றிருந்தாா். அப்போது, அங்கு பந்தலில் கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்கு வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.