பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடை பிடித்தபடி வயல் வெளியில் நடந்து சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:29 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடை பிடித்தபடி வயல் வெளியில் நடந்து சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், தாதம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் கண்ணன்(50), விவசாயி. இவா், புதன்கிழமை தனது விவசாய நிலத்தில் குடை பிடித்தபடி நடந்து சென்றாராம். அப்போது, அங்கு தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் குடை உரசியதால் மின்சாரம் பாய்ந்து கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.