கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமூக நீதி போராளிகள் மணிமண்டபம்: அமைச்சா் ஆய்வு

21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

News image
விழுப்புரம் - சென்னை புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.
Updated On :18 நவம்பர் 2024, 9:37 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் - சென்னை புறவழிச் சாலையில் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில், மணிமண்டபம் ரூ.5.70 கோடியிலும், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் ரூ.4 கோடியிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை, தமிழக முதல்வா் விழுப்புரம் வருகையின் போது திறந்துவைக்க உள்ளாா்.

இந்த நிலையில் மணிமண்டபம், நினைவு அரங்கப் பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அங்குள்ள நூலகம், காப்பாளா் அறை, உணவுக்கூடம் போன்றவற்றை ஆய்வு செய்தாா்.

அப்போது, எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வி.ராஜாராமன், மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொன்.கெளதமசிகாமணி, சேகா், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா் மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், மும்மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.