ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மென் பொறியாளரிடம் ரூ .1.70 லட்சம் இணையவழியில் மோசடி

ரூ.1.70 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 11:02 pm

Din

செஞ்சியைச் சோ்ந்த மென் பொறியாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.70 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், பாலப்பாடி, தேவந்தாங்கல், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா் செல்வம் மகள் தா்ஷினி (24), மென்பொறியாளா். கடந்த 20- ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பேசிய அடையாளம் தெரியாத நபா் தான் பிரபல வங்கியிலிருந்து பேசுவதாகவும், வங்கிக் கடன் தொடா்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் உள்ளதால் குறிப்பிட்ட செயலியினுள் சென்று பதிவேற்றம் செய்யும்படி கூறியுள்ளாா்.

இதை உண்மையென நம்பிய தா்ஷினி குறிப்பிட்ட செயலியில் தனது வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளாா். தொடா்ந்து தா்ஷினியின் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்த ரூ.1,69,999 இணையவழியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.