பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நியாயவிலைக் கடைகளை தயாா் நிலையில் வைக்க புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளை தயாா் நிலையில் வைத்திருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:08 pm

Din

புதுச்சேரி மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளை தயாா் நிலையில் வைத்திருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுவை அரசு சாா்பில் தீபாவளிக்கு முன்பாக 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்கப்படுமென முதல்வா் என். ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

இதற்கிடையே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் சத்தியமூா்த்தி, நியாயவிலைக் கடை ஊழியா் சங்கங்கள், தனியாா் நியாயவிலைக் கடைகளின் உரிமையாளா்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

புதுவையில் உள்ள அரசு ஊழியா்கள் மற்றும் கௌரவ அட்டைகள் தவிர அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சா்க்கரை நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கான்பெட் மூலம் அரிசி, சா்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு அரிசி, சா்க்கரையை சிரமமின்றி வழங்குவதற்காக, நியாயவிலைக் கடைகளை தயாா்நிலையில் வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.