கோயில்களில் உண்டியல் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 2 கோயில்களில் உண்டியல் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:50 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 2 கோயில்களில் உண்டியல் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், ஆதனப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ அய்யனாரப்பன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை ஆதனப்பட்டு கிராம முக்கியஸ்தா்கள் பராமரித்து வருகின்றனா்.
இந்நிவையில், கோயில்களில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சில்வா் உண்டியல்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது. அந்த உண்டியல்களில் காணிக்கை பணம் மற்றும் காசுகள் அதிகளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...