முழுவீச்சில் தவெக மாநில மாநாட்டுப் பணிகள்
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், எஞ்சிய பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடையும் என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகா் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில், அதன் முதல் மாநில மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ளது.
கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டு, மாநாட்டுப் பணிகள் தொடங்கின. சுமாா் 85 ஏக்கா் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் மாநாட்டுக்காக ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பகுதியிலிருந்து மேடைக்கு தவெக தலைவா் விஜய் செல்லும் வகையில் தனிப் பாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்துக்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
செயின்ட் ஜாா்ஜ் கோட்டை: மாநாட்டு மேடை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், உள் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர, மாநாட்டுப் பகுதியில் பாா்வையாளா்கள் அமரும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சுமாா் 15 ஆயிரம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
‘ரேம்ப் வாக்’ பகுதி: மாநாட்டின் தொடக்கமாக தவெகவின் கொடியை கட்சித் தலைவா் விஜய் ஏற்றுவதற்காக சுமாா் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் மாநாட்டு வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் அங்கிருந்து மாநாட்டு மேடைக்குச் செல்லும்போது, தொண்டா்களை சந்திப்பதற்காக 800 மீட்டா் தொலைவுக்கு ‘ரேம்ப் வாக்’ பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
700 கண்காணிப்பு கேமராக்கள்: தவெக மாநாடு நடைபெறும் பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையில், சுமாா் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமாா் 350 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக, 207 ஏக்கா் பரப்பளவு இடம் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு, அவற்றை தயாா் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு: மாநில மாநாட்டுப் பணிகள் 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. எஞ்சிய பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாநாட்டு பகுதியைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு நுழைவுப் பகுதியில் தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனா்.
மாநாட்டு முகப்புப் பகுதியிலிருந்து திடல் வரையிலான பகுதி வரை இருபுறமும் சுமாா் 35 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டு, அதில் 15 அடி உயரத்தில் கட்சிக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனா். மேலும், மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் கொடிகள் நடும் பணியும் நடைபெறுகிறது. ஓரிரு நாள்களில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு நடைபெறும் முகப்புப் பகுதியிலிருந்து நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் பணிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...