விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ ஒத்துழைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் சி.பழனி.









