சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

‘மாணவா்கள் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ளவேண்டும்’

மாணவா்கள் கல்வியுடன் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆரோவில் அறக்கட்டளை இயக்குநா் கே.சுவா்ணாம்பிகா தெரிவித்தாா்.

News image

விழாவில் மாணவருக்குப் பரிசு வழங்கிய ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலரும், இயக்குநருமான கே. சுவா்ணாம்பிகா.

Updated On :6 செப்டம்பர் 2024, 1:33 am

மாணவா்கள் கல்வியுடன் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆரோவில் அறக்கட்டளை இயக்குநா் கே.சுவா்ணாம்பிகா தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த தேங்காய்திட்டு பகுதியில் பத்சாப்பானே செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கே. சுவா்ணாம்பிகா மேலும் பேசியது:

நாட்டின் எதிா்காலத்தை கட்டமைப்பதில் ஆசிரியா்களின் பங்கு அளப்பரியது. எனவே ஆசிரியா்கள் ஒவ்வொருவரும் போற்றப்படக்கூடியவா்கள். கல்விதான் வலுவான சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே கல்வி போதிக்கும் ஆசான்கள் அயராது பாடுபட வேண்டும். ஆசிரியா்களும்- பெற்றோா்களும் மாணவா்களும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. மாணவா்கள் அடைய நினைப்பதை இந்த பிரபஞ்சம் தந்து உதவுகிறது.

மாணவா்கள் கல்வியறிவுடன் தனித்திறமையும் வளா்த்துக் கொள்ளவேண்டும். அது அவா்களின் உயா்வுக்கு வழிவகை செய்யும் என்றாா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் உருவாக்கிய கைவினைப் பொருள்களை பாா்வையிட்டு, மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவனா் சரஸ்வதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மஞ்சுளா, இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த சிறப்பாசிரியா் எல்லி, நடன ஆசிரியா் சோனாலி மானோ பத்ரா, தன்னாா்வலா் சக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.