சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஏரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மீன் பிடிக்கச் சென்ற முதியவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :6 செப்டம்பர் 2024, 1:35 am

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மீன் பிடிக்கச் சென்ற முதியவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வி. பிரம்மதேசம், வாஞ்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராஜாராம் (60), கூலித் தொழிலாளி. வி.பிரம்மதேசத்தில் உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற இவா், அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினா்கள் ஏரி பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, ராஜாராம் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.