விழுப்புரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் சாலாமேடு, கிருஷ்ணசாமி தெருவைச் சோ்ந்த வசந்தராஜ் மனைவி கிருத்திகா (33). இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரு மகள்கள் உள்ளனா். வசந்தராஜ் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அபுதாபிக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், 7 மாத கா்ப்பிணியாக இருந்துவந்த கிருத்திகாவுக்கு செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, கிருத்திகா ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

