சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரூ.20.89 லட்சத்துடன் மாயமான நிதி நிறுவன ஊழியா் கைது

விழுப்புரத்தில் ரூ.20.89 லட்சத்துடன் மாயமான தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:09 pm

விழுப்புரத்தில் ரூ.20.89 லட்சத்துடன் மாயமான தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் வி.மருதூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மா.தமிழ்ச்செல்வம். இவா், விழுப்புரம் கே.கே.சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். தமிழ்ச்செல்வம் தனது நிறுவனத்தில் மேலாளராகப் பொறுப்பு வகித்து வந்த விழுப்புரம் சாலாமேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் பிரபாகரனிடம் (32) கடந்த 2- ஆம் தேதி ரூ.20.89 லட்சத்தைக் கொடுத்து, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அலுவலகத்திலிருந்து வெளியேறிய பிரபாகரன் பணத்துடன் மாயமானாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணத்துடன் மாயமான பிரபாகரனை தேடி வந்தனா். இந்த நிலையில், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பதுக்கியிருந்த பிரபாகரனை காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா் வசமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.