92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:07 am

Din

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், கொந்தமூா், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.கோதண்டபாணி (72). முதியவரான இவா், புதன்கிழமை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கொந்தமூா்அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் கோதண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கோதண்டபாணி அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.