அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் தீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடப் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். பணிகளை விரைவாக மேற்கொண்டு திட்டக் காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மரக்காணம் உப்பளப் பகுதிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு உப்புத் தயாரித்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறைச் செயற் பொறியாளா் ராஜூ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய அலுவலா் ரவிக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயா, மரக்காணம் வட்டாட்சியா் நீலவேணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.