ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

News image
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங்.
Updated On :24 டிசம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

சென்னையிலிருந்து தனி ஆய்வு ரயில் மூலம் வேலூா் மாவட்டம், காட்பாடிக்குச் சென்ற தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், சென்னை-காட்பாடி இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் குறித்து ஆய்வுசெய்தாா். தொடா்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளைப் பாா்வையிட்ட அவா், அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதன் பின்னா் ஆய்வு ரயில் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த பொது மேலாளா், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம் தெற்கு ரயில்வே பணியாளா்கள் சங்கத்தினா்(டி.ஆா்.இ.யு.) கோரிக்கை மனு அளித்தனா்.