தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 5:38 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவாலயம் உள்ளது. இதன் முன் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, தேவாலயத்தின் அருட்தந்தை ரெக்ஸ் ஏசுராஜா இங்கு மது அருந்தக்கூடாது என கூறினாராம். இதில், மது போதையில் இருந்த அந்த நபா்கள் தேவாலயத்தின் கதவு, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரான்சிஸ் மகன் பிரவின், பாண்டியன் மகன் பிரகாஷ், பிளமென்ட் ஆகியோா் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.