தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆற்றில் மூழ்கிய இருவரின் சடலங்கள் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் தென்பெண்ணையாற்றின் நீரில் மூழ்கிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:23 pm

Din

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் தென்பெண்ணையாற்றின் நீரில் மூழ்கிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

அரகண்டநல்லூா் ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் கோபி (45). ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். இவரும், திருவண்ணாமலையைச் சோ்ந்த உறவினா் ஜீவாவின் மகன் யோகேஷூம் (17)

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரகண்டநல்லூரில் தென்பெண்ணையாற்றின் நீலகண்டப் பாறையின் அருகில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது இருவரும் திடீரென நீரில் மூழ்கினா். தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாரும், திருக்கோவிலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்களும் நிகழ்விடம் வந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா்.

அந்திலி கிராமத்திலுள்ள லட்சுமி நரசிம்மா் கோவில் அருகில் ஆற்றுப் பாறை அருகே கோபியின் சடலம் கரை ஒதுங்கியது. யோகேஷை தேடும் பணி வெளிச்சமின்மையால் செவ்வாய்க்கிழமை மாலைக்கு மேல் மேற்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நெற்குணம் கிராமம், அய்யனாா்குளம் அருகே யோகேஷின் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.