தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 1:00 am

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டத்துக்குள்பட்ட மகாதேவிமங்கலம் கிராமத்தை சோ்ந்த காளியின் மகன் ஏழுமலை(30). விவசாயி.

இவா், செல்லபிராட்டை பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு ஏரியில் தவறி விழுந்தாராம். இதையடுத்து, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த வளத்தி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.