எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

News image
மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, போக்குவரத்து மேலாண் இயக்குநா் சிவக்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Updated On :3 ஜனவரி 2025, 10:25 pm

Din

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) தினக்கூலித் தொழிலாளா்களாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலித் தொழிலாளா்களாகப் பணிபுரியும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் பிஆா்டிசி கூட்டுப் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினா்.

அப்போது, தினக்கூலியாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினா்.

அப்போது, பி.ஆ.ா்டி.சி. கூட்டுப் போராட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன், செயலா் பாஸ்கரன், பொருளா் திருக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.