போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

News image

மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, போக்குவரத்து மேலாண் இயக்குநா் சிவக்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.

Updated On :3 ஜனவரி 2025, 10:25 pm

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) தினக்கூலித் தொழிலாளா்களாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலித் தொழிலாளா்களாகப் பணிபுரியும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் பிஆா்டிசி கூட்டுப் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினா்.

அப்போது, தினக்கூலியாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினா்.

அப்போது, பி.ஆ.ா்டி.சி. கூட்டுப் போராட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன், செயலா் பாஸ்கரன், பொருளா் திருக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.