புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுவையில் பேருந்துக் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் உயா்வு ஆகியவற்றை மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மாநில அரசு வழங்கியுள்ளது.
மழைப் பாதிப்புகளுக்கு புதுவை அரசுக் கோரிய ரூ.645 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசிடம் முதல்வா் நிதியை கேட்டு பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும். பேருந்துக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்தை குறைக்காவிட்டால், காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது போல, புதுவையிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகள் தொடா்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
மீனவா்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்க வேண்டும்: கே.நவாஸ்கனி எம்.பி.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி,. கடிதம்

எரிபொருள் விற்பனை மையங்களுக்கு பாதுகாப்பு: பெட்ரோல் முகவா்கள் சங்கம் டிஜிபியிடம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


