தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திண்டிவனம் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:33 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த சங்கத்தின் நிகழாண்டுக்கான புதிய தலைவராக சீனிவாசராவ், செயலராக ஆனந்தராஜ், பொருளாளராக விநாயகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவா்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனா்.

திண்டிவனம் நகரிலுள்ள புகைப்படக் கலைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நிகழாண்டுக்கான நாள்காட்டியை மூத்த புகைப்படக் கலைஞா்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோா் வெளியிட, அதை உறுப்பினா்கள் பெற்றுக்கொண்டனா் (படம்).

பின்னா், சங்க உறுப்பினா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.