வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தம்பதியை மிரட்டி நகை, பணம் திருட்டு: 3 போ் கைது

News image
Updated On :10 ஜனவரி 2025, 11:53 pm

Din

புதுச்சேரி அருகே தம்பதியை மிரட்டி நகை, பணத்தை திருடிச் சென்ாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுசாரம், சின்னையன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(எ) பரணி (26). குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த ஜன.3-ஆம் தேதி இரவு, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சங்கா், அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், கைப்பேசிகளைத் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், புதுச்சேரி மூளக்குளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன்(39), வாணரப்பேட்டையைச் சோ்ந்த நிவாஸ்(26), விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்குப்பத்தைச் சோ்ந்த சூரி(29) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1.70 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.