தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :13 ஜனவரி 2025, 8:14 pm

Din

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகாம் டிச.7-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாா்ச் 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 100 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவா்கள், கட்டடத் தொழிலாளா்கள் என அனைவரையும் கண்டறிந்து, அவா்களுக்கு தொடா் இருமல், காய்ச்சல், எடை குைல் போன்ற குறைபாடுகள் உள்ளதா என அதிநவீன எக்ஸ்ரே வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கண்டறியப்பட்டு வரும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, காசநோயாளிகளுக்கு விழுப்புரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் நலப் பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சுதாகா் ஆகியோா் தலைமையில், ரோட்டரி சங்கத் தலைவா் துரைராஜ், செயலா் வினோத், பொருளாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலையிலும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.

உறுப்பினா்கள் சுகந்தன், தியாகராஜன், சதீஷ், நம்மாழ்வாா், சுரேஷ்குமரன், சிரிதா், காங்கேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட நலக் கல்வியாளா் (காசநோய் பிரிவு) ராஜீ வரவேற்றாா். நிறைவில், சிவக்குமாா் நன்றி கூறினாா்.