மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொங்கல் திருநாள்: புதுவை ஆளுநா் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:52 pm

Din

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, புதுவை ஆளுநா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழா்களின் பண்பாட்டை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: அனைவரது இல்லங்களிலும், அன்பும், வளமும், செல்வமும் பெருகட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இதேபோல, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பொங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.