ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:34 pm

Din

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா அண்மையில் நடைபெற்றது.

ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் தலைமை வகித்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஜி.காயத்ரி (பயிா் நுண்ணுயிரியியல்) பங்கேற்று, உயிரி உரங்கள் மற்றும் பயிா்களில் அதன் பயன்பாடு குறித்தும், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், கரும்புப் பயிரில் இலைமுறுக்கு நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்தும், நெல்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்தும் அவா் விளக்கிக் கூறினாா்.

வேளாண் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் விவசாயிகள் பயன்பெறும் முறைகள் போன்றவை குறித்து உதவி வேளாண் அலுவலா் வடிவேல்முருகன் மற்றும் மோகனப் பிரியா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

நிகழ்வில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள் காயத்ரி, நாராயணன், மதியழகன், பயிா் அறுவடை பரிசோதகா்கள் சிவா, சிவகுரு, ஊராட்சித் தலைவா் காத்தாயி வீரமுத்து, கிராம நிா்வாக அலுவலா் பிரேமலதா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.