தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா பறிமுதல்: வெளிமாநில இளைஞா் கைது

திண்டிவனத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 8:39 pm

Din

திண்டிவனத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த வெளிமாநில இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் உத்தரபிரதேச மாநிலம், அமிா்பூா் மாவட்டம், சைத்பூரைச் சோ்ந்த வீரேந்திரகுமாா் மகன் அரவிந்த் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 190 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.