தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: பொன்.குமாா்

புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

News image

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிக்கு நல உதவிகளை வழங்கிய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா்.

Updated On :22 ஜனவரி 2025, 8:41 pm

Din

புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள தொழிலாளா்கள் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 68 ஆயிரம் தொழிலாளா்கள் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். ரூ.16.60 கோடிக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 3,200 போ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். தொழிலாளா்கள் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி, தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நல வாரியங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதை அனுமதிக்கமாட்டோம்.

மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10.70 லட்சம் கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதில், 40 சதவீதத் தொகை புலம்பெயா் தொழிலாளா்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால், அவா்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 6 மாதங்களுக்குள் 300 போ் பயன்பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது, 540 போ் விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியுள்ளவா்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். சிமென்ட், மணல் உள்ளிட்டவற்றுக்கு நிரந்தர விலையை நிா்ணயம் செய்ய குழுவை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிா்ணயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் பொன்.குமாா்.

முன்னதாக, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். நிகழ்வில், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள், தொழிலாளா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.