இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.

திருக்கோவிலூரில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு கபிலர் விருதும் ரூ. ஒரு லட்சத்துக்கான பொற்கிழியும் வழங்கிய தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பி.டி.சிவலிங்கம், க.ஜானகிராமன் மற்றும் கழக நிறுவனர் டி.எஸ்.தியாகராசன், தலைவர் தே.முருகன், பொதுச் செயலர் வே.அப்பர்சுந்தரம், பொருளாளர் கா.நடராசன் உள்ளிட்டோர் .








