தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:42 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ம.ஜெயச்சந்திரன் (32). சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவா் வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளாா். வங்கி அலுவலா்கள் அடுத்த வாரம் வருமாறு கூறினராம்.

தொடா்ந்து, பைக்கின் முன்பகுதியில் ரூ.1 லட்சத்தை வைத்துவிட்டு ஊருக்கு செல்லும் வழியில் கள்ளுக்கடை சந்திப்புப் பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா் அருந்துவதற்காக ஜெயச்சந்திரன் சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது பைக்கில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.