எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரயில் படியில் பயணித்த பயணிக்கு பலத்த காயம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:38 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

இந்த ரயில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, ஆறுமுகம் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து கைப்பேசியை பாா்த்தவாறு வந்துள்ளாா். அப்போது, இவரது இடது கால் பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆறுமுகத்தை சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி ரயில்வே காவல் துறை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தவா்களின் உதவியுடன் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.