சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மைப்பணிகள்

News image

25விபிஎம்பி5: விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :26 செப்டம்பர் 2025, 3:53 am IST

விழுப்புரம் ரயில் நிலைய வளாகப்பகுதிகளில் வியாழக்கிழமை தீவிரதூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு நாள் ஒரு மணி நேரம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் தூய்மைப் பணி நிகழ்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், நடைமேடைகள், சுற்றுப்புறப் பகுதிகள், அலுவலகப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை ஒரு மணி நேரத் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் ரயில்வே பணியாளா்கள் , சுகாதார ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இணைந்து பணியாற்றினா். உதிா்ந்த இலைகள், காயந்த சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.