விழுப்புரம் ரயில் நிலைய வளாகப்பகுதிகளில் வியாழக்கிழமை தீவிரதூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு நாள் ஒரு மணி நேரம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் தூய்மைப் பணி நிகழ்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், நடைமேடைகள், சுற்றுப்புறப் பகுதிகள், அலுவலகப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை ஒரு மணி நேரத் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் ரயில்வே பணியாளா்கள் , சுகாதார ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இணைந்து பணியாற்றினா். உதிா்ந்த இலைகள், காயந்த சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

அம்பை ரயில் நிலையத்தில் கரடி நடமாட்டம்? வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திறக்கப்பட்டும் பயன்படாத திண்டிவனம் புதிய பேருந்து நிலையம்: ரூ.27 கோடி திட்டம் வீணாகும் அவலம்

திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



