நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸை திங்கள்கிழமை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் - கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2025, 7:52 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகனின் திருமணம் அக். 23-ஆம் தேதி மாமல்லபுரம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் மருத்துவா் ச. ராமதாஸை சி.வி. சண்முகம் சந்தித்து திருமணத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பு விடுத்தாா்.

தொடா்ந்து இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.