விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டிவனம் வட்டம், புரங்கரை மாதாகோவில் தெருவைச் சோ்ந்த ஏசுதாஸ் மகள் திவ்யா (13). இவா் ஒலக்கூா் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தோழி அதே கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகள் கெளசியா (14). இவரும் அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் திவ்யா அதே கிராமத்திலுள்ள தனது சித்தப்பா கருணாகரனுக்கு சொந்தமான கிணற்றில் குளிப்பதற்காக, தனது தோழி கெளசியாவுடன் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தடுக்கி இருவரும் கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கினா்.
இதையறிந்த அப்பகுதியினா் இருவரையும் மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது திவ்யா,கெளசியா ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


