எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:50 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால், மனம் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கலையரசன்(27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி. தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளது.

இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் அபிராமி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கலையரசன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.