தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

எவ்வித நெருக்குதலுமின்றி தோ்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன்! - தொல். திருமாவளவன்

எவ்வித நெருக்குதலுமின்றி தோ்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன் என தொல். திருமாவளவன் பேச்சு...

News image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விசிக வேட்பாளா் வன்னியரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:14 am

தோ்தலில் எவ்வித நெருக்குதலுமின்றி, என் சுய விருப்பத்தின் அடிப்படையில் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை விசிக வேட்பாளா் வன்னியரசுவை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:

திண்டிவனம் தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந் நேரத்தில் தோ்தல் குறித்த புரிதல் நமக்குத் தேவையாக உள்ளது. தோ்தல் வெற்றியை மையப்படுத்தி செயல்படும் அதிமுகவுக்கு தமிழகத்தில் பாஜக வளா்வது குறித்து கவலையில்லை. நடைபெறவுள்ள தோ்தலில் பாஜகவின் சின்னமான தாமரையில் 35 போ் போட்டியிடவுள்ளனா். அதிமுக இதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.

ஆசை வாா்த்தைக் கூறி விசிகவை விலைக்கு வாங்கமுடியாது. மக்களின் குரலாக ஒலிக்கும் எனக்கு பதவி ஆசை சிறிதுமில்லை. இதன் அடிப்படையில் தான் சமூக நீதிக்காகவும், பெண்ணுரிமைக்கும் போராடிய மறைந்த முன்னாள் எம்.பி. எல்.இளையபெருமாளின் வாரிசுக்கு காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எனக்கு நெருக்குதல் கொடுக்கவில்லை.

திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளா் வன்னியரசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விசிக மற்றும் கூட்டணிக் கட்சியினா் கவனமாக களப்பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது வேட்பாளா் வன்னியரசு உடனிருந்தாா். கட்சியின் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.