புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் புதுச்சேரி எல்லையையொட்டி அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி மாநில எல்லையையொட்டி 5 கி.மீ. சுற்றளவில் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் அமைந்துள்ள தனியாா் மது அருந்தும் கூடங்கள், அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஏப்.7 முதல் 9-ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட நாள்களில் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் இயங்காது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவு- 144 தடை உத்தரவு அமல்

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
மே 4-ல் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


