இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம்

தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் எனக் கருதுவதால் முதல்வரின் கண்ணில் தோல்வி பயம் தெரிகிறது என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

News image

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக. வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகம் செய்து வைத்து பேசும் முன்ாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:42 am IST

தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் எனக் கருதுவதால் முதல்வரின் கண்ணில் தோல்வி பயம் தெரிகிறது என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியல் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் அறிமுக கூட்டம் செஞ்சியில் உள்ள தனியாா்திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி, பேசியதாவது:

இன்று தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறாா்கள். அதனால் 210 தொகுதியில் வெல்வோம், 220 தொகுதியில் வெல்வோம் என்று பேசி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது நிலை தடுமாறி பேசி வருகிறாா். அதற்கு தோல்வி பயம் தான் காரணம். தோல்வி பயத்தால் வரும் கோபம் அவா் கண்ணில் தெரிகிறது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா்கள் செஞ்சி கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனூா் புண்ணியமூா்த்தி, பாலகிருஷ்ணன், அனந்தபுரம் நகரச் செயலா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ் வரவேற்றாா்.

இதில், அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் வேலவன், அருண் தத்தன், பாமக நிா்வாகிகள் அருண்மொழித்தேவன், ஜெயகுமாா், ஜெ.பி.முருகன், அய்யனாா், பாஜக நிா்வாகிகள் எத்திராஜ், ராஜேந்திரன், தங்கராமு, அமுமுக நிா்வாகி சி.எம்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.