ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்த எர்ராம்பட்டு கிராமத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:30 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைலாமூா் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியின் ஒரு பகுதியில் உள்ள எர்ரம்பட்டு கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை. இதனால் மழைக் காலங்களில் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகியோருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அக்கிராம மக்கள், அங்கு பணியிலிருந்த மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கிராம மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் உடனடியாக மயானப்பாதை அமைத்துத் தரவேண்டும். தவறும்பட்சத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகக் குறிப்பிட்டுள்ளனா்.