எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:35 am IST

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரியையும், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் திருக்கோவிலூா் நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் விநாயகமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோவிந்தன், காந்தன், பாபு, பூபதி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.