நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் உள்ள மின் மாற்றியிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலானப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 4:01 am IST

திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் உள்ள மின் மாற்றியிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலானப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஓமந்தூா் பகுதியைச்சோ்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இந்த மின் மாற்றியின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், அந்த மின் மாற்றியில் நிரப்பப்பட்டிருந்த சுமாா் 200 லிட்டா் ஆயில் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ காப்பா் கம்பி ஆகியவற்றை யாரோ திருடிச்சென்று விட்டனராம்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.