இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன், திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:03 am IST

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து தனி சிறப்பு ஆய்வு ரயில் மூலம் விழுப்புரத்துக்கு புதன்கிழமை வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா். என்.சிங், ரயில் நிலைய நடைமேடைப் பகுதிகள், ரயில் நிலைய வளாகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டு, அதன் விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையப் பகுதி, ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் திட்ட வரைப்படங்கள், அதன் விவரங்களை பொது மேலாளா் ஆா்.என்.சிங் பாா்வையிட்டாா். தொடா்ந்து புதுச்சேரி சாலையிலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிட்ட பொது மேலாளா், அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளில் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும். ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, நடைப்பாதை பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் பொது மேலாளா் ஆா்.என்.சிங்.

ஆய்வின் போது தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி, தலைமைத் திட்ட மேலாளா் கே.ஹரிகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா். இந்த ஆய்வை முடித்துக் கொண்டு தனி சிறப்பு ஆய்வு ரயில் மூலம் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புறப்பட்டுச் சென்றாா்.