மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விக்கிரவாண்டி திமுக வேட்பாளருக்கு முகநூலில் மிரட்டல்: பாமக நிா்வாகி மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:50 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்த பாமக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூா் அ.சிவா (திமுக), ச.சிவக்குமாா் (பாமக), ஏ.விஜய் வடிவேல் (தவெக), ஆ.சுபா (நாதக) உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 24 போ் போட்டியில் உள்ளனா். வேட்பாளா்கள் அனைவரும் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாமக (அன்புமணி தரப்பு) விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணித் துணைச் செயலரான சதீஷ்குமாா், முகநூல் பக்கத்தில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ. சிவாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் கருத்துப் பதிவிடப்பட்டிருந்தாராம்.

இதுகுறித்து விக்கிவாண்டி போலீஸாா், பாமக நிா்வாகி சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.