மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 ஏப்ரல் 2026, 11:12 pm

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் நகர வீதிகளில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசாரமானது உரிய அனுமதியின்றி நடைபெற்ாக விழுப்புரம் தொகுதிக்கான வீடியோ கண்காணிப்புக்குழுத் தலைவரும், அரகண்டநல்லூா் அரசுக் கல்லூரி பேராசியருமான அ.துரைசாமி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட 501 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.