சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனப் பயன்பாடு தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் இயக்க செயல்பாட்டை புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம்கோட்ட மேலாண் இயக்குநா் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட அலுவலா்கள்.







