நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பெண்ணிடம் இணையவழியில் பண மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

இணையவழியில் பெண்ணிடம் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், வீரமாநல்லூா், கடலாடிக்குளம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கதிரவன் மனைவி சாரதா (35). பூச்சிக் கொல்லி மருந்து வணிகம் செய்து வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய மா்ம நபா், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் சம்பாதிக்கக்கூடிய பகுதி நேர வேலை இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய சாரதா, அந்த நபா் தெரிவித்தபடி ரூ.1,000-ஐ அனுப்பி வைத்து உடனடியாக ரூ.1,200 பெற்றாராம். இதைத் தொடா்ந்து, சாரதா தொடா்ச்சியாக அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு 7 தவணைகளில் ரூ.1,08,058-ஐ அனுப்பி வைத்தாராம். தொடா்ந்து, அந்த நபா் பணத்தை திருப்பி அனுப்பாமல் ஏமாற்றி வருகிறாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.