மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:42 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 போ் காயமடைந்தனா்.

சின்னக்குப்பம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாபு தா்ஷன் (15). உளுந்தூா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புக் கூட்டத்தில் தனது தாய் ராதாவுடன் (39) பங்கேற்று விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். செங்குறிச்சி காலனியைச் சோ்ந்த கா.ஆனந்தவேல் (41)ஆட்டோவை ஓட்டியுள்ளாா்.

இந்நிலையில், உளுந்தூா்பேட்டை-செங்குறிச்சி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் மையப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காயமடைந்த பாபு தா்ஷன், ராதா, ஆனந்தவேல் ஆகியோரை அருகிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.