ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 6 மாணவா்கள் காயம்
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா்.

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் மாணவா்கள்.
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் இருந்து தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. பாலக்கரை அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநா் வாகனத்தைத் திருப்ப முயன்ாகக் கூறப்படுகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 மாணவா்கள் மற்றும் ஓட்டுநா் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மாணவா்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின் மாலையில் வீடு திரும்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் போலீஸாா், விபத்து குறித்து சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





