விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஒரு கிராமத்தினா் எதிப்புத் தெரிவித்தும், மற்றொரு கிராமத்தினா் ஆதரவுத் தெரிவித்தும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் புதூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை மதுக்கடை முன் திரண்ட கிராண்டிபுரம் கிராம மக்கள் மதுக்கடையை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.
மற்றொரு கிராம மக்கள் ஆதரவு: இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு நடுவனந்தல் கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அந்தப் பகுதியில் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்கள் மூலம் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.
பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை பிற்பகலில் நடுவனந்தல் புதூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்களை கைது செய்த போலீஸாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல் குவாரிகளை தடை செய்யக் கோரி 82 கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

சித்தன்கொட்டாய் கிராமத்தில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மனு

அரசு மதுக்கடையில் சுவரை துளையிட்டு திருட்டு
டாஸ்மாக் முறைகேடு புகாா்: செந்தில் பாலாஜியின் பெற்றோா், ஆதரவாளா்கள் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



